தூத்துக்குடி இரட்டை படுகொலைக்கு நீதி கோரி..! நீலகிரி மேற்கு மாவட்ட மஜக சார்பில் ஆர்ப்பாட்டம்..!!


நீலகிரி:ஜூன்.29.,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறை அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனத்தால் கொலை செய்யப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ், மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், ஆகியோருக்கு நீதிகேட்டு நீலகிரி மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் S.தமீமுன் அன்சாரி, அவர்கள் தலைமையில், நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜோசப், ரபீக், மற்றும் நிர்வாகிகள் சம்ரின், நியாஸ், ஜீவா, ஹரி, சந்திரன், சமீர் காக்கா, அப்துல் ரகுமான், ஷம்சீர். ரியாஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு காவல்துறை நடத்திய படுகொலையை கண்டித்து பதாகை ஏந்தி கோஷமிட்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நீலகிரிமேற்குமாவட்டம்
28-06-2020